“மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ்” கடவுள் என்பதை குறிக்கும் விதமாக தீபாராதனை காட்டியவரே “ஆரத்தி தட்டாலேயே” நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தை ஓவிய ஆசிரியர் வரைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள்,

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சமூக சேவையை பாராட்டு விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும், கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் லாரன்ஸ் அவர்களை “மனித ரூபத்தில் இருக்கும் கடவுள்” என்பதை குறிக்கும் விதமாக தீபாராதனை காட்டியவரே,
“ஆரத்தி தட்டாலேயே” நடிகர் லாரன்ஸின் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி பிரபலமான ராகவா லாரன்ஸ்.

பின்னர் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கிய இவர், முனி, காஞ்சனா போன்ற படங்களை இயக்கியதின் மூலம் இயக்குனராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல், அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார், பல நற்பணிகளை மக்களுக்காக செய்து வருகிறார். பல பேரின் இதய அறுவை சிகிச்சைக்காக பண உதவிகளை செய்து வருகிறார்.

ஆதரவற்றோருக்கும், ஏழை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகள் செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், 13 மாற்றுத்திறனாளிக்கு புது ஸ்கூட்டிகளை வழங்கியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கண்ணீர் மல்க கடவுள் போல வந்து உதவி செய்து இருப்பதாக நன்றியை லாரன்ஸ் அவர்களுக்கு தெரிவித்தார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது “மாற்றம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இதன் மூலமாக பல ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். அதில் கஷ்டப்படும் விவசாயிகள் பயன்படும் வகையில், அவர்களை தேடி சென்று 10 டிராக்டர்கள் வழங்கியுள்ளார். மக்கள் லாரன்ஸ் அவர்களை கருப்பு எம்ஜிஆர், வள்ளல், மனித கடவுள் என்று அழைக்கிறார்கள்.
ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் லாரன்ஸின் மக்கள் சேவையை பாராட்டு விதமாகவும், “மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ்” என்பதை குறிக்கும் விதமாகவும், கஷ்டப்படுவருக்கு உதவும் லாரன்ஸை கடவுளாக பாவித்து தீபாராதனை காட்டியவரே,

“ஆரத்தி தட்டின் கீழ் மார்க்கர் வைத்து தீபாரதனை காட்டியவரே “ஆரத்தி தட்டாலேயே” நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தை நான்கு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் நடிகர் லாரன்ஸ் கடவுள் மாதிரி என்றும் கடவுளுக்கு தீபாரதனை காட்டுவது போல் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் நடிகர் லாரன்சை கடவுளாக பாவித்து லாரன்ஸ் படத்தை தீபாராதனை காட்டியவரே வரைந்த ஓவிய ஆசிரியர் செல்வத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.