Arani : தனியார் பள்ளி வாகனம் இன்ஜினில் திடீர் தீ விபத்து – குழந்தைகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!

1 Min Read

ஆரணி அருகே தனியார் பள்ளி வாகனம் இன்ஜின் பழுதுதாகி திடிரென புகை மூட்டத்தில் தீ ஏற்பட்டதால் குழந்தைகள் அலறல். பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 13 குழந்தைகளை பத்திரமாக மீட்டு தீயை அணைத்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கபட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த ஆரணி அருகே நெசல் கிராமத்தில் இயங்கும் ஆரஞ்ச் என்ற தனியார் பள்ளி வாகனம்,

தீயணைப்பு துறையினர்

இன்று காலை படவேடு பகுதியிலிருந்து வெல்லூர், நடுக்குப்பம், காமக்கூர், முள்ளிபட்டு வழியாக நெசல் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல தனியார் பேருந்து சென்றன.

அப்போது நடுக்குப்பம் என்ற கிராமத்தில் குழந்தைகளை ஏற்ற முயன்ற போது பள்ளி வாகனத்தில் இன்ஜின் பகுதியில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டு, திடிரென தீ முண்டது. இதனால் பேருந்தில் இருந்த சுமார் 13 குழந்தைகள் அலறினர்.

ஆரணி
களம்பூர் போலீசார்

பின்னர் இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உடனடியாக 13 குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் சேதம் தவிர்க்கபட்டன. இதனை அடுத்து சம்பவடத்திற்கு வந்த ஆரணி களம்பூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இன்று பள்ளி திறந்த முதல் நாளில் தனியார் பள்ளி பேருந்தில் இன்ஜின் பழுதாகி தீ மூண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review