வடமாநிலங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் 2038 பேர் உயிரிழப்பு

1 Min Read
வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம்

இந்த ஆண்டு பருவமழை வெள்ளம், மின்னல் மற்றும் நிலச்சரிவு காரணமாக 2,038 பேர் உயிரிழந்துள்ளனர், பீகாரில் அதிகபட்சமாக 518 பேர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 17 வரை மழை மற்றும் வெள்ளத்தின் போது 101 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 1,584 பேர் காயமடைந்துள்ளனர்.

மழை, நிலச்சரிவு மற்றும் மின்னல் ஆகியவற்றால் 335 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ,  அவற்றில் 40 மாவட்டங்கள் மத்தியப் பிரதேசம் , 30 அசாம்  மற்றும் 27 உத்தரபிரதேச மாநிலத்தை உள்ளடக்கிய மாவட்டங்கள் ஆகும் .

இமாச்சலப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களும், உத்தரகாண்டில் ஏழு மாவட்டங்களும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி 892 பேரும், மின்னல் காரணமாக 506 பேரும், நிலச்சரிவு காரணமாக 186 பேரும் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பருவமழையின் போது பல்வேறு காரணங்களால் மொத்தம் 454 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் தவிர, குஜராத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் காரணமாக 165 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 138 பேரும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 107 பேரும், சத்தீஸ்கரில் 90 பேரும், உத்தரகாண்டில் 75 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் மொத்தம் 160 குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 17 குழுக்கள் இமாச்சலப் பிரதேசத்திலும், 14 குழுக்கள் மகாராஷ்டிராவிலும், தலா 12 உத்திரப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலும், தலா 10 அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளத்திலும், 9 உத்தரகண்டிலும் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a review