ஆடி மாத விசேஷம் : முதியவர்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகம் சுற்றுலா – அமைச்சர் சேகர்பாபு..!

5 Min Read

ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கட்டணமில்லா ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 250 பேர் 5 மண்டலங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பில்;- ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும்,

புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

ஆடி மாத விசேஷம் : முதியவர்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகம் சுற்றுலா

இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக மூத்த குடிமக்கள் பங்கேற்கும் ஆடிமாத அம்மன் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மிக பயணத்தை,

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். இந்த முதற்கட்ட ஆன்மிக பயணத்தில் சென்னையை சேர்ந்த 52 பக்தர்கள் உள்பட 250 பக்தர்கள் இந்த முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மிக பயணத்தை மேற்கொண்டனர்.

பின்னர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது;- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின் ஆன்மீகப் பயணமாக இறையருள் பெற நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆடி மாத விசேஷம் : முதியவர்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகம் சுற்றுலா – அமைச்சர் சேகர்பாபு

அந்த வகையில், யாத்திரை செல்ல 40 ஆயிரமாக இருந்த 50 ஆயிரமாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் 200 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்த மக்கள் ராமேஸ்வரத்திலிருந்து காசி செல்ல மூத்த குடிமக்கள் 200 பேருக்கு அரசு நிதியில் அனுமதி அளித்தார்.

இந்த ஆண்டு 300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை காசி ராமேஸ்வரம் புனித பயணங்களுக்கு 500 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த 500 பக்தர்களுக்கு ஆகும் செலவு ஒரு கோடி 25 லட்சத்தை அரசு மானியமாக வழங்கியுள்ளது என தெரிவித்தார்.

அறுபடை வீடுகளை வயது முதிர்ந்தவர்கள் ஒரே நேரங்களில் சுற்றி வருவது முடியாத ஒன்று, ஆயிரம் நபர்களை அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்து அதற்கு மானியமாக ஒரு கோடியை 58 லட்சம் ரூபாயை அறிவித்து இதுவரை 49 பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழக அரசு

மூன்று கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுவாமி மலையில் இந்த அறுபடை வீடுகள் பயணம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு அதேபோல் ஆயிரம் பக்தர்கள் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்ல அரசு மானியமாக வழங்கி உள்ளார்கள்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின் திருக்கோவில்களை பொருத்தவரை ஆன்மீக சுற்றுலா செல்ல வயது முதிர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு தரிசனம் கிடைக்க,

அனைத்து முதுநிலை கோயில்களில் என்று சொல்லப்படும் 42 திருக்கோவிலில் இந்தாண்டு முழுவதும் அந்த சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ய தமிழக அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு ஆடி மாதம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு

இன்று முதல் கட்டமாக 250 பேர் 5 மண்டலங்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து 52 பேர் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள். இதற்கு ஆகும் செலவாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புரட்டாசி மாதம் 1000 மூத்த பொதுமக்களுக்கு வைணவ கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா இதேபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசு ரீதியாக ஐம்பது லட்சம் முதலமைச்சர் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.

அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு வரும் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வரின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல்படி மாநாட்டில் சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது. முருகரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதுவரை வெளிநாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வரப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வந்துள்ளன. தமிழகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வந்துள்ளன.

இந்த ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்து ஒரு புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் அமர்ந்து அந்த நிகழ்வுகளை கண்டுகளிக்க மழை வெயில் என எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லாமல் இருக்க கூரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளை 3D வடிவில் வடிவமைத்து அருகில் முருகனை பார்ப்பது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆடி மாத விசேஷம் : முதியவர்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகம் சுற்றுலா – அமைச்சர் சேகர்பாபு

வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தங்குமிடம் வாகன வசதி அனைத்து ஏற்பாடுகள் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. முருகனின் பல்வேறு பெயரிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமான தரமான உணவு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுவரை நடைபெற்ற மாநாட்டில் இந்த மாநாடு தான் பெரிய அளவில் இருக்கும். அந்த வரலாற்றை படைக்கப் போகிறவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்று வரும் செய்திகள் குறித்த கேள்விகளுக்கு, தலைவர் வலது புறம் செல்ல சொன்னால் வலது புறம் செல்வோம் இடதுபுறம் செல்ல சொன்னால் இடதுபுறம் செல்வோம்.

அமைச்சர் சேகர்பாபு

நான் அடிப்படைத் தொண்டன் நான் பெரிய முடிவுகளை எல்லாம் முதலமைச்சர் எடுப்பார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இது சம்பந்தப்பட்ட அனைவரையும் இன்னார் என்று பார்க்காமல் கடுமையான நடவடிக்கை முதலமைச்சர் எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

Share This Article
Leave a review