கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

1 Min Read

ஶ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் , மாணவி தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரப்பா என்பவரது மகன் மஞ்சுநாத் வயது (20). இவர் கலசலிங்கம் பல்கலையில் உள்ள விடுதியில் தங்கி பி.டெக் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவர்

அப்போது விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மஞ்சுநாத் இன்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். என்ன நடந்தது தெரியவில்லை ஆனால் தனது விடுதி அறையில் மஞ்சுநாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் கௌகிவாலி பள்ளி அகிலா வயது (19). இவர் விடுதியில் தங்கி இருந்து பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை

இவருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை ஆனால் தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணன் கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணன்கோவில் போலீசார்

இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பின்பு ஒரே நாளில் இருவர் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review