காவிரி நீர் பிரச்சனை தீர மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்..!

2 Min Read

காவிரி நீர் பிரச்சனை தீர மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும். வெறும் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதாக கூறுகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணிக்கு 56,000 வாக்குகள் கிடைத்தன. ஆனால் பாமக தோல்வியை சந்தித்தது.

பாமக

இதனிடையே கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி கூறுகையில், பாமக வேட்பாளருக்கு உழைத்த தேஜ கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டியில் 66 ஆயிரம் வாக்குகளை அதிமுகவினர் பெற்றனர். ஆனால் இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து 40 ஆயிரம் பேர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். 2 ஆண்டுகளில் 3 முறை திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

காவிரி நீர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு போராட்டம் பாமக சார்பில் நடைபெற உள்ளது. காவிரி நீர் விவகாரத்தில், காவிரி ஆணையம் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் கொடுக்கக் கூறியும் அதனை கொடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தனர்.

தமிழகத்திற்கு 177.72 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டுமென காவிரி ஆணையம் உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. வெறும் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதாக கூறுகிறது.

காவிரி நீர் பிரச்சனை தீர மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

காவிரியில் கேட்ட நீரை விட பருவமழையால் நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பிரச்சனை தீர மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும். இதன்மூலம் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும், என்றார்.

அப்போது வழக்கறிஞர் பாலு, மாவட்ட தலைவர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ, மாவட்ட தலைவர் புகழேந்தி, வேட்பாளர் அன்புமணி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a review