கோவை மாவட்டத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விளைநிலங்களை காட்டு யானைகள் அழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். தொண்டாமுத்துார் அருகே, 12 மணி நேரமாக முள் காட்டில் முகாமிட்ட காட்டு யானை கூட்டத்தை வனத்துறையினர் நேற்றிரவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டத்தில், வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்டினாலும், மீண்டும் அவை விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தன. இந்த யானை கூட்டம் தொடர்ந்து வனப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று இரவு பள்ளபட்டி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு விளைந்த பயிர்களை நாசப்படுத்தி விட்டு சென்றன.

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை, குப்பனூர், தீத்திப்பாளையம் ஆகிய கிராமங்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து, கடந்த சில நாட்களாக, 25க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்ட கூட்டமாக சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரங்களில், மதுக்கரை அய்யாசாமி கோவில் வனப்பகுதியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்ட கூட்டமாக வெளியேறியது.

அதில் 8 காட்டு யானைகள் இரவு நேரங்களில், குப்பனுார், சொர்ணாலயம் கார்டன் அருகில் உள்ள ஊருக்க்ள் இருக்கும் முள்காட்டிற்குள் புகுந்தது . நேற்று காலை, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், காட்டு யானைகள் இருப்பதை பார்த்து, மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காலை நேரம், ஊர்களில் உள்ள தோட்டங்களில் பலரும் வேலை செய்து கொண்டிருந்ததாலும், அப்பகுதி சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருந்ததாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நேற்று மாலையில், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் முடிவெடுத்தனர்.

மேலும் நேற்று மாலை வரை காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பின்னர் ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர், இரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணித்த வனத்துறையினர், அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது