அமைச்சர் கண்முன்னே ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்பு – பொதுமக்கள் நெகிழ்ச்சி..!

2 Min Read

தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. பின்வருமாறு;-

- Advertisement -
Ad imageAd image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மழை வெள்ளத்தை பார்வையிட சென்று அமைச்சர் இ. பெரியசாமி கண்முன்னே வைகை ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி ஆய்வுகளை மேற்கொண்டு விசாரித்தார்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தொடர் கனமழை காரணமாக காற்றாற்று வெள்ளமும் சேர்ந்து கொண்டதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதன் தொடர்ச்சியாக வத்தலகுண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி வைகை ஆறு கரையோரப் பகுதி மக்களை அமைச்சர் இ. பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் விசாரித்தார்.

திண்டுக்கல்லில் வைகை ஆற்றின் பாலத்தின் மீது நின்று அவர் ஆய்வு மேற்கொண்ட போது தொடர் கனமழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து குறித்து பார்வையிட்டுக் மேற்கொண்டிருந்த போது திடீரென்று ஆற்று கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று திடீரென்று தவறி ஆற்றுக்கள் விழுந்து தத்தளித்து போராடி கொண்டிருந்ததது.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி

பின்னர் வைகை ஆற்றில் அமைச்சர் கண்முன்னே பசு மாடு ஆற்றில் விழுந்து அடித்து வரப்படுவதை கண்டு பதற்றம் அடைந்த அமைச்சர் இ. பெரியசாமி உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்து போராடி கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டார். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் கிராம மக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் இ.பெரியசாமி வைகை ஆறு கரையோரம் விரைவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

Share This Article
Leave a review