உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு..!

2 Min Read

உதகை அருகே புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது மண் சரிவு ஏற்பட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம், அடுத்த உதகையில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது உரிய அனுமதியின்றி நடைபெறும் இது போன்ற கட்டுமான பணிகளின் போது, அவ்வப்போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

இந்த நிலையில் உதகை அடுத்த லவ்டேல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்க்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 7 பெண்கள் உட்பட 8 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது.

அதில் 8 பேரும் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதை அடுத்து புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மண்சரிவில் சிக்கியிருந்த 8 பேரையும் மீட்டனர்.

உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

இருப்பினும் அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் 2 இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். அப்போது ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

அப்போது உயிரிழந்தவர்களில், சங்கீதா வயது (35), சகீலா வயது (36), பாக்கியா வயது (36), உமா வயது (35), முத்துலட்சுமி வயது (35) என்பது தெரியவந்துள்ளது. பின்னர் உயிரிழந்த மற்றவர்கள் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review