பொதுமக்களால் தவறவிடப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 Min Read
  • பொதுமக்களால் தவறவிடப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களால் தவறவிடப்பட்டது, புகார் பெறப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, உரியவர்களிடம் ஒப்படைத்தார். தங்களது செல்போன்களை பெற்றுக்கொண்ட புகார்தாரர்கள், தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்த காவல்துறையினருக்கு நன்றியினையும் , பாரட்டுகளையும் தெரிவித்தனர். பொது இடங்களிலும் , பயண நேரங்களிலும் தங்களது செல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறும் , பயன்படுத்தப்பட்ட செல்போன்களை விலைக்கு வாங்கும் போது உரிய ரசீது இல்லாமல் வாங்க கூடாது என்றும் செல்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டவர்களிடம் ஆய்வாளர் சந்திரா அறிவுரை வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review