ஆவின் ஐஸ்கிரீம்களில் 4 வகையான ஐஸ்கிரீம் விலை மாற்றம் – ஆவின் நிறுவனம்..!

2 Min Read

ஆவினின் 100 வகையான ஐஸ்கிரீம்களில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே மாற்றி அமைத்துள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார்,

ஆவின் ஐஸ்கிரீம்களில் 4 வகையான ஐஸ்கிரீம் விலை மாற்றம்

சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, பிரீமியம் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை (65 மி.லி) ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், 125 மி.லி.

கொண்ட ஆவின் வெண்ணிலா ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆகவும், 100 மி.லி. கொண்ட வெண்ணிலா கிளாசிக் கோன் விலை தலா ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 100 மி.லி. கொண்ட ‘கிளாசிக் கோன்’ சாக்லெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை நேற்று முதல் உயர்ந்திருக்கிறது.

ஆவின் ஐஸ்கிரீம்களில் 4 வகையான ஐஸ்கிரீம் விலை மாற்றம்

இந்த செய்தி பொதுமக்கள் பலருக்கும் சிறிது சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக பால்வளத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;- தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உற்பத்தி பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் ஐஸ்கிரீம்களில் 4 வகையான ஐஸ்கிரீம் விலை மாற்றம்

மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அப்போது இடுபொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாதது.

ஆவின் நிறுவனம்

பின்னர் எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Share This Article
Leave a review