இலங்கை கடற்படையால் 21 மீனவர்கள் கைது: விடுவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

1 Min Read

இலங்கை கடற்படையால்‌ கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்‌ படகுகளை உடனடியாக விடுவித்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “IND-TN-10-MM-1061, IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண்‌ கொண்ட மீன்பிடிப்‌ படகுகளில்‌ இராமநாதபுரம்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களைச்‌ சேர்ந்த 21 மீனவர்கள்‌ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக்‌ கடற்படையினரால்‌ 6-12-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்‌ படகுகளும்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

மு.க.ஸ்டாலின்

மீன்பிடித்‌ தொழிலையே தங்கள்‌ வாழ்வாதாரமாகக்‌ கொண்டுள்ள மீனவர்கள்‌, இலங்கைக்‌ கடற்படையினரால்‌ அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின்‌ வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 21 மீனவர்களையும்‌ அவர்களது பீன்பிடிப்புப்‌ படகுகளையும்‌ விடுவிப்பதோடு இலங்கைக்‌ கடற்படையினரால்‌ ஏற்கனவே பறிமுதல்‌ செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப்‌ படகுகளையும்‌ உடனடியாக விடுவிக்கக்‌ தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review