கோவை மாநகராட்சியில் 200 கோடி நிதி வீணாய் போச்சு – வானதி சீனிவாசன்..!

2 Min Read

கோவையில் 1200 கோடி நிவாரண நிதி தந்தது மோடிஜீ அரசு, மக்களுக்கு நிவாரண பணம் வழங்க அலைகழிப்பு வானதி சீனிவாசன் குற்றசாட்டு. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம், ராஜா வீதியில் பாஜக கட்சியின் மண்டல அலுவகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக கட்சியின் மண்டல அலுவகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றியும், மகளிர்கள் சுலபமாக நாப்கின் பெற வசதியாக தானியங்கி நாப்கின் வழங்கும் மிஷினை இயக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; வரும் நாடாளுமன்ற தேர்தலிலுக்கு  கட்சியினுடைய செயல்பாடுகள் முழுமையாக தொடங்கிவிட்டது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் மண்டல அலுவலகம் தொடங்கி, மக்களின் கோரிக்கைகள், தேவைகளை அறிந்து செயல்படவும், கட்சியின் செயல்பாடுகள், மோடியின் சாதனைகளை விளக்க வேண்டும் என்றார்.

- Advertisement -
Ad imageAd image
வானதி சீனிவாசன்

தென் தமிழகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது. அங்கே பாஜக கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன்ராதாகிருஷ்ணன், பலர் களத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் திமுக தலைவரும் முதல்வரான மு.க ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்று உள்ளார். தேர்தலுக்காக நாடகம் போடுவது திமுக தான். மக்களை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. கோவை மாவட்டம் பாஜக சார்பாக நிவாரண பணிகள் அனுப்பப்படுகிறது என்றார். கோவை மாநகராட்சிக்கு  200கோடி ரூபாய் நிதி தந்தும், சாலைகள் சரியாக போடவில்லை. ஒப்பந்தகார்கள் மக்கள் வரி பணத்தை வீண் அடிக்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் விளக்க நோட்டீஸ் அனுப்பவே நேரம் சரியாக இருக்கிறது என்றார்.

வானதி சீனிவாசன்

மத்திய அரசு, நிவாரண நிதியாக  1200கோடி ரூபாய் தந்தது. ஆனால் திமுக மக்களை ஏமாற்றும் வேலையாக செய்து வருகின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி, டோக்கன் தருகிறோம் என்று அதற்கு பணம், ரேஷன் கடையில் பணம் பெற நீண்ட வரிசையில் நிற்க வைத்து, பெண்களை அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். தென் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராம்ன், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்பு பணிகளை செய்ய உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல நிவாரண உதவிகளும் செய்து வருகின்றனர் என்றார். பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு  திமுகவினர் எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் சுமத்தப்பட்ட நபர்கள் நல்லவர்களாக காட்டிக் கொள்ளுகின்றனர். செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்தும், துறையில்லாத அமைச்சர் என நம்மை ஏமாற்றினர். அதேபோல தான் பொன்முடி அமைச்சர் பதவி மட்டும் இல்ல எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை தான் என்றார்.

 

Share This Article
Leave a review