ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய என்ஜினீயர் தற்கொலை .

2 Min Read
வசந்த் (22)

இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்றது . இந்த நிறுவனங்கள் தங்களுக்கென செயலி ஒன்றை உருவாக்கி , கடன் வழங்கும் முறையை எளியதாக்கி வந்தாலும் . அந்த கடனுக்கு அதிகளவில் வட்டி போடுகின்றனர் . மேலும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் அவதி பட்டு வருகின்றனர் .

- Advertisement -
Ad imageAd image

கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அங்கங்கே நடந்து கொண்டு தான் உள்ளது .

இதே போல் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் பகுதியில் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னபெல்லாளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த். இவருக்கு 22 வயது ஆகிறது. வசந்த் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருந்தார்.

இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேலும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரைண நடத்தினர். இந்த விசாரைணயின்போது அவர் தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரியவந்தது.

மேலும் விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்ததும், அதனை செலுத்த முடியாமல் அவர் தவித்ததும் தெரியவந்தது. மேலும் குடும்பத்தினரிடம் இருந்து அவர் அடிக்கடி பணம் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Share This Article
Leave a review