வணிகர் தின உரிமை முழக்க மாநாடு., மே5 ல்.! விக்கிரம ராஜா அறிவிப்பு..!

2 Min Read
Representative Image

திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் , வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா , 40 வது மாநில மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தில் வணிகர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மேலும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற இருக்கின்றது. இது தொடர்பாக திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்,
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம் ராஜா ,
பல்வேறு சட்ட பிரச்சனைகள் குறிப்பாக தென் மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட செஸ் வரி. இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொண்டு சென்று அதனை திரும்ப பெற்றுக் கொண்டதற்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் .

மாநில தலைவர் விக்கிரமராஜா

அதனைத் தொடர்ந்து நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய இடங்களில் இயங்கி வரும் கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கட்டுப்பாட்டிலுள்ள கடைகள், மீண்டும் அதே கடைகளை நியாயமான வாடகை தொகையை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் மார்கெட்டுகள் இடிப்பதாகவும் அப்புறப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் இந்த இடங்கள் கட்டப்பட்டு மீண்டும் அதே வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வணிக மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இவைகளை அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு, மாநாட்டின் மூலம் கொண்டு செல்ல உள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் விலகி இருந்தால் அதனை சீர் செய்ய அந்தந்த துறையின் அமைச்சரை சந்தித்து சாமானிய மக்களும் தடையில்லாமல் ஆவின் பால் கிடைப்பதற்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வலியுறுத்தும் எனவும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review