வன்னியர்கள் முன்னேற்றம் பெற ஓய்வில்லாமல் உழைப்போம்- டாக்டர் ராமதாஸ் உறுதி.

2 Min Read
டாக்டர் ராமதாஸ்

வன்னியர்  சங்க 44 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்று நிகழ்ச்சியில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதற்கு வன்னியர் சங்கம் மாநில தலைவர் பூதா அருள்மொழி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ், சமூக நீதி மாநில செயலாளர் வக்கீல் பாலாஜி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் தர்மன்,மாவட்ட செயலாளர் ஜெயராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது ஒரு பொன்னாள் இதே நாளில் 1980 ஆம் ஆண்டு உவமை மக்களுக்காக மிக மிகப் பிற்படுத்த பட்ட வன்னிய மக்களுக்காக வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. 44 ஆம் ஆண்டில் பல்வேறு சோதனைகள், முள் பாதைகளை கடந்து நாங்கள் வந்தாலும், அந்த முள் பாதை மலர்ப்பாதையாக மாற்றி உள்ளோம். என்ன நோக்கத்திற்காக வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதோ, அது இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. எந்தவித சோதனைகள், வேதனைகள் ஏற்பட்டாலும் வன்னியர்களுக்காக எல்லா வகையிலும் முன்னேற்றம் பெரும் வரையில் ஓய்வில்லாமல் உழைப்போம். எங்களுக்கு ஓய்வென்பதே இல்லை.

டாக்டர் ராமதாஸ்

இந்நாளில் வன்னியர் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் நலமுடன் வாழ உறுதி ஏற்போம் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் செல்வகுமார், மாவட்ட துணைச் செயலாளர் பால்பாண்டி என்ற ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம், வன்னியர் சங்க நகர செயலாளர் பூதேரி ரவி, பாமக மாவட்ட பொருளாளர் கவிதா, கிளியனூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒலக்கூர் ஒன்றிய பொருளாளர் பழனி முருகன், மாவட்ட பாமக ஊடக பிரிவு தமிழ்ச்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகம் முன்பு மாநில வன்னியர் சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி தலைமையில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

Share This Article
Leave a review