புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,இன்று துவக்கி வைத்தார்.

1 Min Read
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று இரவு டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.இதனையடுத்து, இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற உதகை மலைரயில் வண்டியை மத்திய இணை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

- Advertisement -
Ad imageAd image
உதகை மலை ரயில்

புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு, குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் இந்த மலை ரயில் வண்டியை இந்திய ரயில்வே துறையினர் புதிய வடிவில் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். புதிய வடிவில் உருவாக்கப்பட்டு இன்று துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மையத்தை மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சேலம் கோட்ட ரயில்வே துறை மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.]

உதகை மலை ரயில்

நிகழ்வினை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னெடுப்பில் ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார் மேலும் ரயில்வே துறை மேம்பாட்டில் தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அம்ரித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நிகழ்வினைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம், சிறுமுகை, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று மத்திய அமைச்சர் கலந்து கொண்டு வருகிறார்.

Share This Article
Leave a review