- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி…..
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வந்து இறங்கினார்.
தொடர்ந்து தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ,முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கும்பகோணம் திமுக மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் , கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க .அன்பழகன் துணை மேயர் தமிழழகன் பாஜக மாநில செயலர் கருப்பு முருகானந்தம்,பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவலர் அரசு அணிவகுப்பு மரியாதை ஏற்று அங்கிருந்து காரில் ஏறி நாதன் கோவிலில் உள்ள ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்..