கிளியனூர் பகுதி திண்டிவனம் அருகே புதுச்சேரி உள்ள நான்கு வழி சாலையில் வங்கி ஊழியர் இருவர்கள் கள்ளகாதல் விவகாரத்தால் காதலி காருக்குள் கழுத்தில் குத்துப்பட்டு உயிரிழந்தும், காதலன் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் விழுந்து விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரழ்ந்திருப்பது. அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் பகுதி திண்டிவனம் அருகே புதுச்சேரி உள்ள நான்கு வழி சாலையில் ஆண் சடலம் ஒன்று சாலையில் தலை நசுங்கி கிடந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் கிளியனூர் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வெள்ளை கார் ஒன்றை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் காரின் உள்ளே கழுத்தில் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை கண்ட போலீசார் இருவருது உடலையும் மீட்டனர்.

புதுச்சேரி கணகசெட்டிகுளம் பகுதியில் அருகில் அமைந்துள்ள பிம்ஸ் தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரத்தினர். முன்னதாக இருவரும் வைத்திருந்த வாகன ஒட்டுனர் உரிமம் மற்றும் அவர்கள் பணி புரிந்து வந்த தனியார் வங்கியின் (கரூர் வைஸ்யா வங்கி) அடையாள அட்டைகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
இதில் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது (37) என்பவர், இவருக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளன. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர் கரூர் வைசியா வங்கியின் மரக்காணம் கிளை மேலாளராக பணி புரிந்து வந்தார். இறந்த பெண் மதுரா பாஃண்டிஸ் வயது (34) , அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கரூர் வைசியா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் ஒன்றாக பணி புரிந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளகாதலாக மாறி உள்ளதாகவும், இந்த விவகாரம் கோபிநாத்தின் மனைவிக்கு தெரியவர அவர் கோபியை கண்டித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை கோபிநாத்தும், மாதுராவும் புதுச்சேரி திண்டிவனம் சாலை கிளியனூர் பகுதிக்கு காரில் சென்றனர்.மதுரா திருப்புலியால் கழுத்தில் குத்தப்பட்டு இரத்த வெளத்தில் உயிர்ழ்ந்து காணப்பட்டது. கோபி கார் அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் விழுந்து தலை நசுங்கி உயிரிழந்திருப்பதும் போலீசார்க்கு முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மதுராவை கோபி திருப்புலியால் குத்தி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடைபெற்றதில் மதுரா தன்னை தானே திருப்புலியால் குத்தி கொண்டதை கண்டு அச்சம் அடைந்த கோபி சாலையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.