தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணங்களில் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றனர். நீலகிரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை மட்டும் இன்றி நீலகிரி மலை ரயில் நிலையம் பயணம் செய்ய விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகமாகவே குவிந்துள்ளதால், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஏராளமான வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் நிலவி வருகிறது.
தொடர் விடுமுறை என்பதால் சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

உதகையில் பிரதானமாக தாவரவியல் பூங்கா, படகு இல்ல ஏரி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். ஏரியில் மிதிபடகு, மோட்டார் படகு உள்ளிட்ட படகுகளில் பயணித்து சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்து வருகின்றனர். இதேபோல் தாவரவியல் பூங்காவில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவித்தவாறு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகை ஆகியவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.
இதனிடையே நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளதால் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உதகையில் அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, மைசூர் சாலையில் வாகனங்கள் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன.
மேலும் சிறப்பு வாய்ந்த நீலகிரி மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு நாடு முழுவதிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணத்தை விரும்புகின்றனர். தொடர் விடுமுறை காரணத்தால் உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ரயில் பயணத்தை ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு ஏறாளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயில் பயணத்தை விரும்பி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணித்தின் போது காணக்கூடிய இயற்கை காட்சிகளையும், குகைகளையும் பார்த்து ரசித்து உற்சாகத்துடன் பயணம் செய்கின்றனர். இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்று வருகின்றன. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.