குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிராக போராட்டம்-திருவண்ணாமலை அருகே பரபரப்பு .

2 Min Read
பிச்சை எடுத்தும் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு  உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும்  தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் ஒருங்கிணைக்கப்பட்டு  வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது.

அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து குப்பை கிடங்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு தேவனந்தல், புனல் காடு, கலர் கொட்டா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17 நாட்களாக புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து கடந்த 17   நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது போராடும் கிராம மக்களுடன் விவசாய சங்கம் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே. ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் ஒன்று திரண்ட பாஜகவினர்.

இந்த குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் குப்பை கிடங்கு அமைக்கப்படுவதை எதிர்த்து கைகுழந்தைகளுடன் போராட்ட இடத்தில் சமைத்து உண்டு, உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை மரக்கிளைகளுடனும், திருவோடு பாத்திரத்தை கையில் ஏந்தி பிச்சை எடுத்தும் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த போராட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவும் இணைந்துள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே. ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் ஒன்று திரண்ட பாஜகவினர் புனல் காடு பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புக்கு எதிராக குப்பை கிடங்கு அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் கைவிட கோரி நேற்று பாஜகவினர் அந்த பகுதியில் ஒன்று திரண்டனர்.

திருவண்ணாமலையில் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும், குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பசுமை மரக்கிளைகளுடனும், திருவோடு பாத்திரத்தை கையில் ஏந்தி பிச்சை எடுத்தும் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று இந்தப் பகுதியில் குப்பை கிடங்க அமைக்கும் வேலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்  என்றும் மேலும் அவர்கள்  கைவிட தவறினால்.
இதுபோன்று பல  நூதனப் போராட்டத்தில் தாங்கள் ஈடுபடுவோம் என்றும் விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் ஏச்சரித்துள்ளனர்.

Share This Article
Leave a review