- திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, தலையணை அருவி செல்லும் சாலையை சீரமைக்க உத்தரவிட கூறி வழக்கு.
களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு செல்லும் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வனத்துறை உரிய சாலை அமைக்காதது ஏன் நீதிபதிகள் கேள்வி? சாலை அமைக்கும் வரை நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க நேரிடும் – நீதிபதிகள். சாலை அமைப்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் களக்காடு முண்டந்துறை பணப்பகுதி அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு.
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுலா தளங்களுக்கு மிகவும் புகழ் பெற்ற மாவட்டமாக உள்ளது இங்கு அகஸ்தியர் அருவி உள்ளது இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு அகஸ்தியர் கோவில் உள்ளது இந்த கோயிலுக்கும் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் தலையணை அருவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர் இந்த அறிவிக்கு செல்லக்கூடிய சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது.
இந்தப் இரண்டு பகுதியும் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியாகும் புலிகள் காப்பகமும் உள்ளதால் இந்த பகுதியை வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த அருவிக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கின்றனர்
பொதுமக்கள் வந்து செல்ல வாகனங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை பாதுகாக்கப்பட்ட புலிகள் வன காப்பகம் உள்ள பகுதியாக இருப்பதால் புலி, காட்டு விலங்குகள் சாலைகளுக்கு வர வாய்ப்புள்ளது சாலைகள் மிக மோசமாக இருப்பதால் பொதுமக்கள் வேகமாக கடந்து செல்ல முடியாது இதில் தேவை இல்லாத அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க உத்தரவிட வேண்டும் என மனு தாகசெய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதம் அடைந்து உள்ள புகைப்படங்களை தாக்கல் செய்தார்கள். இதனைப் பார்த்த நீதிபதிகள் சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளது ஆனால் வனதுறையினர் வரக்கூடிய மக்களிடம் கட்டண வசூல் மட்டும் செய்து வருகின்றனர்.
ஏன் சாலைகளை சீரமைக்க வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சாலைகள் சீரமைக்கும் வரை இந்த அருவிக்கு வருபவரிடம் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் அருவிக்கு செல்லக்கூடிய சாலைகள் உரிய சாலை வசதிகள் செய்து தருவது குறித்து களக்காடு முண்டந்துறை வனப்பாதுகாப்பு அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.