கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆலோசனை கூட்டத்தில் சீமான் தனது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என சீமான் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதற்கு பிறகு அதிமுகவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதா என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளோம், பிற கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பார்கள். இன்னும் நாட்கள் உள்ளது பிறகு தான் பேச வேண்டும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என சீமான் மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக மன்மோகன் சிங் ஆட்சியில் கூட்டணி இருந்த போது ஏன் சுங்க சாவடிகளை அகற்றவில்லை.

திமுக தான் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, சி ஐ ஏ, என் ஐ ஏ, போன்றவற்றை கொண்டு திமுக கட்சி கொண்டு வந்தது. தற்போது திமுக கட்சியாளர்கள் புனிதரை போல் செயல்படுகிறது என்று சீமான் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார்.
எனது கட்சியில் பிரதமர் வேட்பாளர் இல்லையா என கேட்கிறார்கள், எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர், நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள் தான், பிரதமர் வேட்பாளர் என சீமான் ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.