ஊதியம் வழங்க கோரிய தலைமை ஆசிரியரை, பள்ளியின் தாளாளர் கம்பை எடுத்து அடித்து விரட்டு வீடியோ வைரல்.

1 Min Read
  • ஒரத்தநாடு அருகே தனியார் பள்ளியில் முறையாக ஊதியம் வழங்க கோரிய தலைமை ஆசிரியரை, பள்ளியின் தாளாளர் கம்பை எடுத்து அடித்து விரட்டு வீடியோ வைரல்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் நெடுஞ்சாலையில் உள்ள சண்முகம் மந்திரி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் பணி செய்யும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பள்ளியின் தாளாளரான மாதவனிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான ரஞ்சிதாவை பணியிலிருந்து விலகுமாறு, பள்ளியின் தாளாளர் வற்புறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதனையடுத்து அவர் பணியில் இருந்து நின்றுவிட்டார். மேலும் பணி செய்த காலத்திற்கான ஊதியத்தை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பள்ளியின் தாளாளர் மாதவன் 20-ஆம் தேதி பள்ளிக்கு வாருங்கள் ஊதியத்தை தருவதாக தெரிவித்து இருக்கிறார். அன்றைய தினம் தனது குழந்தையுடன் பள்ளிக்குச் சென்றபோது பள்ளியின் நுழைவாயில் அடியாள் போல் நின்று கொண்டு பள்ளியின் நுழைய வந்த ஆசிரியரை கம்பை எடுத்துக்கொண்டு அடித்து விரட்டும் போது, ஆசிரியரின் மகன் அழுது கொண்டு ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a review