நாளை தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர்! எங்கெல்லாம் ச …

The News Collect
1 Min Read
குடியரசுத்தலைவர்

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5 முதல் 8 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

ஆகஸ்ட் 5-ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தரும் குடியரசுத்தலைவர், தமிழ்நாட்டில் உள்ள யானைகள் பராமரிப்போருடன்  (Mahouts and Cavadies) கலந்துரையாடுகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். அன்றைய தினம், சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டின் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கிறார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதுடன், ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் என பெயர் சூட்டும் விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

குடியரசுத்தலைவர்

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) லீனியர் ஆக்ஸிலரேட்டர் உபகரணத்தை ஆகஸ்ட் 7ம் தேதியன்று குடியரசுத்தலைவர் தொடங்கிவைக்கிறார். தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்து வைக்கும் அவர், புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

ஆகஸ்ட் 8, 2023 அன்று, ஆரோவில்லில், நகர கண்காட்சியான மணிமந்திரைப் பார்வையிடும் குடியரசுத்தலைவர், மாநாடு ஒன்றையும்  தொடங்கி வைக்கிறார் .

Share This Article
Leave a review