விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் – இருதரப்பினர் பேச்சுவார்த்தை .

3 Min Read
கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் வழிபாடு செய்ய பட்டியல் சமூதாய மக்களை அனுமதிக்காத விவகாரம் சர்ச்சைக்குரிய கோயிலை பூட்டி சீல் வைப்பு இரண்டு தரப்பினரிடமும் கோட்டாட்சியர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது .

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி  திரௌபதி அம்மன் கோவில் நுழைவு சம்பந்தமாக ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக கோவில் சீல் வைக்கப்பட்டன :  இந்நிலையில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான விசாரணை குழு இருத்தரப்பை சேர்ந்த 79 பேரிடம் விசாரணை தற்போது விசாரணை நடைபெற்று முடிந்தது.‌‌விழுப்புரம்  அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற கட்டுப்பாடுகள் காலம், காலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய கூடாது என்பதில் ஊர் பகுதியில் வசித்து வரும் ஒரு  சமூதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது திரெளபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி கும்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் போலீசார்

‌‌இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய கூடாது என்பதில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உறுதியாக இருந்ததால் அந்த சமரச பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில் மேல்பாதி கிராமத்தில் இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் சர்ச்சைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து திரெளபதி அம்மன் கோயிலை  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரு தரப்பினர்

‌‌மேம்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‌‌

விசாரணையின் போது ஒரு தரப்பினர் அந்த கோயில் தங்களின் பூர்வீக கோயில் என்றும், அதற்கான ஆவணங்கள் முழுவதும் தங்களிடம் இருப்பதாகவும். இது தொடர்பாக தாங்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளனர். அதையும் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளனர்.

‌‌பட்டியலின மக்கள் சார்பில் தாங்கள் ஒரு பிரிவினராக பாதிக்கப்பட்ட தரப்பினராக இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய மற்றொரு பிரிவினருடன் இணையாக விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம். மேலும் இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது ஆதாரம் ITMS NO 22467 இப்படி இருக்கும் நிலையில் சாதியின் பெயரால் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Share This Article
Leave a review