- நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணை சரியான வழியில் செல்ல வில்லை. தாமதமாகிறது. வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் சிபிஐ தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நியோமேக்ஸ் வழக்கில் இதுவரை 2, 585 புகார்கள் பெறப்பட்டு உள்ளது.புகாரின் படி ரூ .466,79,68,049 / பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் வைப்பு தொகை பெறப்பட்டு மோசடி நடந்து உள்ளது/பொருளாதார குற்றப்பிரிவு பதில் மனு தாக்கல்
விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருகிறது. விசாரணையை வேறு ஏஜென்சிக்கு மாற்ற கூடாது/பொருளாதார குற்றப்பிரிவு பதில் மனு தாக்கல்
சிவகாசி காமராஜர் சாலை பகுதியை மகேஸ் வரி . உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது.
இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன்,கபில் என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாக ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.
இதை நம்பி பலர் பல ஆயிம் கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனடிப்படையில்
வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரை சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.
இந்த நிலையில் நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணை சரியான வழியில் செல்ல வில்லை. தாமதமாகிறது. வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது , மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி . டி.எம்.மனிஷா , பதில் மனு தாக்கல் செய்து ள்ளார்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கடந்த. 2023 ம் ஆண்டு பிரிவுகள் 406, 420, 34 IPC மற்றும் தமிழ்நாடு வட்டி பாதுகாப்பு பிரிவு 5ன் கீழ் பதிவு செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் 2009 ஆம் ஆண்டில் க்ரீன் வெல்த் அக்ரோ இந்தியா லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர்.
அதன் பின் தங்கள் தலைமையகத்தை மதுரைக்கு மாற்றி நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினர். அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் வேறு வேறு நிறுவனங்கள் பெயரில் பெரும் தொகையை முதலீட்டாளல்களிட ம் வைப்புத்தொகையாக வசூலித்துள்ளனர் .நியோ மேக்ஸ் உள்ளிட்ட திட்டங்களின்படி, வசூலிக்கப்பட்ட டெபாசிட்களில் இருந்து பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.
DTCP விதிகளைப் பின்பற்றி, அந்த நிலங்களை மனைகளாக உயர்த்தி, 30 % மனைகளை டெபாசிட் செய்பவர்களுக்குக் கொடுத்து உள்ளனர்.பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில், நியோ மேக்ஸ் நிறுவனத்தினர் பல்வேறு பெயர்களில் 110 நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அதில் 50 நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் .
*சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தொழில்நுட்ப ரீதியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களை அவ்வப்போது தங்களுக்குள் மாற்றிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 57 இடங்களில், குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில், நீதிமன்ற அனுமதி பெற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.சோதனையின் முடிவில் தங்கம் , வெள்ளி மதிப்பு சுமார் ரூ.1,51,04,212/- பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் நிறுவனங்களின், அதிநவீன கார்கள் – 34 , இரு சக்கர வாகனங்கள் – 2 , டிஜிட்டல் சான்றுகள் – 101 மற்றும் 1, 480 அசல் பதிவு ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பான அசையா சொத்துக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 2, 585 புகார்கள் பெறப்பட்டு உள்ளது.புகாரின் படி ரூ .466,79,68,049 / பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் வைப்பு தொகை பெறப்பட்டு மோசடி நடந்து உள்ளது.
நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு சொந்தமான ரூ.172.89.81.389/ மதிப்புள்ள சொத்துகள் தமிழ்நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டு, பட்டா, சிட்டா, அடங்கல், உண்மைத் தன்மை போன்ற சொத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைச் சேகரித்து உள்ளோம், இந்தச் சொத்துகளுக்கு எதிரான இணைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையின் போது இதுவரை 44 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுமார் ரூ.11,56,46,000/-மதிப்புள்ள சொத்துக்களை இடைக்காலப் பறிமுதல் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 12 முகவர்களில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருகிறது. விசாரணையை வேறு ஏஜென்சிக்கு மாற்றுவதற்கு இது அடிப்படையாக இருக்க முடியாது.
விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றினால், முதலீட்டாளர்க ள் மேலும் பாதிக்கப்படுவர். அவர்கள் முதலீட்டு தொகையை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்.எனவே விசாரணையை மாற்றக் கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும் என பதில் மனுவில் தெரிவித்து உள்ளார்.இதை தொடர்ந்து, சிபிஐ தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.