உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதை. ஆட்சியர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குறிஞ்சிப்பாடி அருகே உடன் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் என்பவர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன் குப்பம் ஊராட்சி கஞ்சமநாதன் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணகுமார்.
இவர் கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட விபத்து காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு இடையில் கிருஷ்ணகுமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.இறந்தவரின் கிருஷ்ணகுமார் உடலை எடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர்.

அதன்படி உரிய அரசு வழிகாட்டுதலின்படி அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இரண்டு சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகிய நான்கு உறுப்புகள் பெறப்பட்டு அந்த உறுப்புகள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது. தமிழக அரசு ஏற்கனவே தன் உறுப்புகளை இயன்று பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து, நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பிராஜ் உடலுறுப்பு தானம் செய்த விவசாயி கிருஷ்ணகுமார் வீட்டிற்கு நேரில் சென்று அரசு சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிப்பு வரவேற்க தகுந்ததாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.