
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மார்க் மது பாட்டில்களின் அதிகபட்ச விலை வரிகள் உட்பட எத்தனை ரூபாய் என்று மது பாட்டில்களிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் டாஸ்மார்க் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை உள்ள பகுதிகளில் கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பேனரில் தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மார்க்களில் அதிகபட்ச விலை வரிகள் உட்பட என பிரின்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அனைத்து டாஸ்மார்க்ளிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த பத்து ரூபாய் யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலை விற்கக் கூடாது அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மார்க் இழுத்து மூடப்படும். அந்த கூடுதல் பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மார்க் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று பேனரில் உள்ளது. இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று சித்தர்காடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை உள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. பேனரை வைத்தவர்களே பேனரை கழட்டி எடுத்து சென்று விட்டதாகவும் டாஸ்மார்க் கடை மேலாளர் தெரிவித்தார். ஆனாலும் அங்கு மதுபானம் வாங்கி வந்தவர்களிடம் கேட்டபோது 130 ரூபாய் குவாட்டர் மது பாட்டிலுக்கு 140 ரூபாய் டாஸ்மார்க் கடையில் வாங்குவதாகவும் தெரிவித்தனர்.