தமிழ்நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்து வருகின்ற  3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும். மேலும் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  4 மாவட்டங்களில் மிக கன மழையும் 17 மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்லில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  பலத்த காற்றுவீசக்கூடும்  அதுபொழுது லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு,  கோயம்புத்தூர், தேனி,  திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  .

மேலும் சென்னையை பொறுத்த வரையில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாககவும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Share This Article
Leave a review