கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம்..!

2 Min Read

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் மல்லர் கம்பம் போட்டிகளில் ஒட்டு மொத்த அணி பிரிவில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளது. இந்த நிலையில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 217 பேர் 23 அணிகளாகக் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

அதில், ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் திங்கள்கிழமை பெண்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த மகாராஷ்டிரா அணி 209.25 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும் வென்று உள்ளது. மேலும் 207.35 புள்ளிகள் பெற்ற தமிழக அணி இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். மேலும் 205.30 புள்ளிகள் பெற்ற மத்தியபிரதேச அணி மூன்றாமிடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி துவங்கினர்

முதல்முறையாக மல்லர் கம்பம் போட்டிகளில் தமிழக அணி இதுவரை தனிநபர் பிரிவில் மட்டுமே வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது முதல்முறையாக அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளது. ஏற்கெனவே 4 முறை தங்கம் வென்ற மகாராஷ்டிர அணியிடம், வெறும் 2.10 புள்ளிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில், கடந்தாண்டு தங்கம் வென்ற மத்தியபிரதேசத்தை மூன்றாமிடத்துக்கு தள்ளி தமிழக அணி வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமைக்குரியது ஆகும். மேலும் இரண்டாவது நாளாக அனுமதி மறுப்பு தமிழக அணி வெள்ளி வென்று சாதனை படைத்துள்ள நிலையில், அதனை கண்டு கைதட்டி உற்சாகப்படுத்த கூட பார்வையாளர்கள் இல்லாதது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றனர்

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மும்மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் கவனம் செலுத்த வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதேபோல, செய்தியாளர்களுக்கும் வெற்றிப் பெற்றவர்களின் விவரங்களை பற்றிக் கூட தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து மல்லர் கம்பம் போட்டி மேலாளர் திலீப் கவானே கேட்ட போது, இணையதளத்தில் நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் அனுமதிக்கப்படுவர். செய்தியாளர்களின் பிரச்சனைகள் களையப்படும் என்றார்.

Share This Article
Leave a review