தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்- ஜவஹிருல்லா எம் எல் ஏ .

4 Min Read
ஜவஹிருல்லா எம் எல் ஏ

மத்திய சிவில் சட்ட வாரியம் சமீபத்தில் பொதுமக்களிடம் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து மக்களுடைய கருத்துக்களை கேட்டிருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி பேசும்போது நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருக்கிறார் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ஆணையத்தை அமைத்த அந்த சட்ட ஆணையம் தனது அறிக்கையை அழித்து உள்ளது

அதில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்ததற்கான சாத்திய கூறுகள் என அறிக்கை தந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரக் கூடிய சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக ஒன்பது ஆண்டுகள் பாஜக ஆட்சியில் எல்லா வகையிலும் தோல்வி அடைந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தோடு மோடி சிறுபான்மை சமூகத்தை வைத்து சிறு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான மிசோராமின் முதலமைச்சர் சட்டத்தை ஏற்கவில்லை .மேலும் மணிப்பூரிலும் இந்த சட்டத்தை ஏற்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுவரை முஸ்லிம்கள் மட்டும் தான் தனி சட்ட வாரியம் அமைத்துள்ளனர்.

ஆனால் தற்போது சீக்கிய மதத்தினர் தனி சட்ட வாரியம் அமைத்திருக்கிறார்கள்.‌‌பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டும் எதிர்க்கவில்லை பாஜக கூட்டணியில் உள்ள அங்கம் உள்ள கட்சியினரும்  எதிர்க்கின்றனர்.

அயோத்திலே ராமர் கோவிலை கட்டி விட்டோம்’ 370 பிரிவை நீக்கி விட்டோம் அதேபோல சிவில் சட்டத்தை கொண்டு வந்து 2024 தேர்தலிலே வெற்றி பெறுவோம் என மோடி நினைக்கிறார்.

அவருடைய கனவு பகல் கனவாகும் வாட்டர்லு போரில்‌‌பிரான்ஸ் மன்னன் நெப்போலியனை தோற்கடித்தது போல் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நிற்பார்கள்.

மோடி அரசாங்கத்தினுடையஇந்த பன்முக தன்மை குறித்து பண்பாட்டை சிதைக்க கூடிய நடவடிக்கைக்கு எதிராக மக்கள் செயல்படுவார்கள்.

கர்நாடகாவில் ஹிஜாபை கொண்டுவந்து ஆட்சியை இழந்த பாஜக போல் நிலைமை இந்தியா முழுவதும் வரும்.பொது சிவில் சட்டம் பற்றி இஸ்லாமிய சமூக மக்கள் கவலைப்பட தேவையில்லை.

இந்தியர்களுக்கும் அவர்களுடைய தனிப்பட்ட பண்பாடு நடைமுறை கலாச்சாரம் ஆகியவற்றிக்கு எதிரானது ஒட்டுமொத்தமாக ‘அனைவரும் எதிர்த்து மாற்றியமைப்பார்கள்,

தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி இனி அந்தர் பல்டி ரவி என்று தான் அழைக்க வேண்டும்‌‌ பல சந்தர்ப்பங்களில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு அந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு வந்த பின் அவர் அதை மாற்றி அமைத்திருக்கக்கூடிய நிலைமை நாம் பார்த்துள்ளோம்.

அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது ஒரு அமைச்சருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்துவது மட்டும் தான் ஆளுநர் கடமை ஆளுநர் முதலமைச்சர் யாரை நியமிக்கிறாரோ பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு பதவியேற்பு செய்து ஆளுநர் வேலை. அவர் அமைச்சரை முதலமைச்சர் பரிந்துரையை அங்கீகரிப்பது அவர்களுடைய வேலை.

சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாக ஒரு அமைச்சரை நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.

சட்டவல்லுனர்களை கலந்து கொள்ளாமல் முடிவு எடுத்து   இருக்கிறார்கள் என்பதும் உள்துறை அமைச்சகம்.கூறி உள்ளது .

மேலும் முதலமைச்சர் உள்துறை அமைசருக்கு எழுதிய கடிதத்திலேயே இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மிக தெளிவாக சட்ட ஆலோசனையும்  பெறாமல் தான் தோன்றித்தனமாக சர்வாதிகார மையமாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆளுநர் ரவியை மாளிகையில் இருந்து தொடராமல் ஒன்றிய அரசு திரும்பப்பெறும் வரை தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து தொடர் போராட்டம் நடத்த வேண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகிறேன்

.பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட கழகம் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்கின்றது.

பாஜகவிற்கு அடிமை மனப்பான்மையோடு இருக்கிறவர்கள் மட்டுமே அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்

அரசியலில் ஓபிஎஸ் ஆண்டியாக தான் செயல்படுகிறார் ஓபிஎஸ் இன் அறிவின்மையை  வெளிப்படையாக தெரிகிறது:

நிச்சயமாக எதிர்க்கட்சிகள் ஒன்று சேரக்கூடிய அந்த நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் .இந்தியா முழுவதும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது

பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் பாஸானார் என்பது தெரியவில்லை அரசியல் அமைப்பு சட்டத்தினுடைய பார்ட் 3 ஃபண்டமெண்டல் ரைட்ஸ் அடிப்படை உரிமைகளை பற்றி பேசுகிறது அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அபிலாசை வெளிப்படுத்துகிறது பொது சிவில் சட்டம் என்பது அம்பேத்கர் அவர்கள் விரும்பி இருந்தால் பண்டமாண்டல் பிரிவில் சேர்த்திருக்கலாம் ஆனால் சேர்க்கவில்லை காரணம் இது தொடர்பாக மக்களுடைய ஒருமித்த கருத்து எப்போது ஏற்படுகிறது அப்போதுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அம்பேத்கர் அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் சொல்லி இருக்கிறார் இதையெல்லாம் பிரித்து இட்டுக்கட்டி அண்ணாமலை போன்றவர்கள் வரலாறு தெரியாமல் சட்டம் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்

என ஜவஹிருலலா Mட A கூறினார்.

Share This Article
Leave a review