திடீர் தீ விபத்து காரணமாக
பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள், இயந்திரங்கள் எரிந்து சேதம்,
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில்
கண்ணன், நாராயணன் ஆகியோர் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில், வாடகைக்கு பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் சேகரித்து வைக்கும் குடோன் இயங்கி வருகிறது.
இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்கள் பணியில் இல்லை, அருகிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த பனியன் நிறுவனத்தின் பின்பகுதியில் உள்ள பனியன் வேஸ்ட் குடேனில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள் மீது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது,

திடீரென தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த பனியன் நிறுவனத்தில் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள்,பின்னலாடை இயந்திரங்கள் மீது பரவி அனைத்தும் பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது,
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டது,
தொடர்ந்து தீ புகை பரவியதால் அந்தப் பகுதியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிறிது நேரம் தீயை அணைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இது குறித்து உடனடியாக மற்ற தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் , 3 தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைத்து வருகின்றனர்,
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் இயந்திரங்கள் முற்றிலும் இருந்து சேதமானது,
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு காரணங்களால் என நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்,

இதன் காரணமாக திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தீயை முழுமையாக அனைத்து பிறகு பொருள் சேதங்கள் எவ்வளவு என்று கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு கருவிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.