ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்காது-சீமான்

2 Min Read
சீமான்

காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் 222 வது குருபூஜை விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,ஆளுநர் குறித்தும் அண்ணாமலை குறித்தும் பல கருத்துக்களை பேசியிருந்தார்.சாதிவாரி கணக்கெடுப்பு பற்றியும் கருத்து தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்ததை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் சூழலில்,குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.ஆளுநர் அரசியல் பேசியதாலும்,தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் இப்படி பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம்.ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்காது என்றார்.தேவையில்லாமல் அரசியல் குறித்து தொடர்ந்து ஆளுநர் கருத்து வெளியிட்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

தமிழக போராட்ட வீரர்கள் குறித்து ஆளுநர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.சுதந்திர போராட்ட வீரர்களை கூட தமிழகத்தில் சாதி தலைவர்களாக மாற்றி விட்டார்கள் என்று அதற்கு பதிலலைத்த சீமான்,வரலாற்றில் தமிழ் போராட்ட வீரர்களை மறைக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த குற்றச்சாட்டை கூற உங்களுக்கு என்ன தகுதி உள்ளது நீங்கள் தான் எங்களது வரலாற்றை சிதைத்தது. என்றார் சீமான்

ஆர்எஸ்எஸ் ன் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது என்றும்,
எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு நக்கலாக சிரித்த அண்ணாமலை அவரை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி இருந்தால் ரசித்திருப்பார் என்றார்.என்னை பல கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோது நான் போகவில்லை நான் என்ன கமலஹாசன் கட்சியிலா சேருவேன் என்றவர்,

சீமான்

விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள் என்பதை நான் வரவேற்கிறேன் ஆனால் அதனை சொல்ல தகுதியும், தராதரமும் வேண்டும் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு, நீட்டுக்கு எதிராக கையெழுத்து போன்றவை ஒருபோதும் பயன் தராது என கூறியவர் ஓட்டுக்கு பணம் கொடுக்க வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்க முடியும் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக அலுவலகங்களில் அரசு உயரதிகாரிகள் தமிழ் எழுத்தில் பிழை விடுவது சில இடங்களில் மட்டுமல்ல.
நாடெங்கும் அப்படித்தான் உள்ளது என்றும் சீமான் பேட்டியில் கூறினார்

Share This Article
Leave a review