கோடை வெயில் மற்றும் வெப்ப அலை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கிவைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் , ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் வகையில் , செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைக்கும் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மட்டும் நில்லாமல் , அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.வெயில் காலங்களில், தேநீர், காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களை கேட்டுக்கொண்டார் .