மலை கிராம கலாச்சாரத்தால் நாட்டான்மை இல்லாததால் நடக்க வேண்டிய திருமணமும் நிறுத்தப்பட்டனர்
அணைக்கட்டு அருகே தாலி எடுத்து கொடுக்க வேண்டிய நாட்டாமை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால் வாலிபர் திருமணம் நின்றது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி, கோயில் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும், ஊரான் (நாட்டாமை) ஆக இருப்பவர் முடிவு செய்து தேதி கூறிய பிறகு தான் நிகழ்ச்சிகள் நடத் தப்படும்.

அதேபோல், ஊரான் வந்து தாலி எடுத்து கொடுத்த பிறகே திருமணம் நடக்கும் சம்பிர தாயம் இருக்கிறது.
இந்நிலையில், வெள்ள கல் மலைக்கு ஊரானாக சேகர் என்ற சங்கர்(39) இருந்து வந்தார். இவரது அண்ணன் மகன் வசந்த் என்பவருக்கும், ஜமுனா முத்தூர் அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை வெள் ளக்கல் மலையில் உள்ள மணமகன் வீட்டில் திருணம் நடைபெற இருந்தது. எனவே, இந்த திருமணத்தில் தாலி எடுப்பதற்காக கடந்த 5ம் தேதி ஊரான் சேகர் மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஊ சூருக்கு வந்தனர்.
பின்னர் சிவநாத புரம் மலையடிவாரம் வரும்போது, அங்கிருந்த வேலூர் எஸ்பி தனிப்படை போலீசார் சாராயம் விற்பதுதொடர்பாக சேகரை மடக்கி விசாரணைக்காக அரியூர் காவல் நிலையத் திற்கு அழைத்து சென்ற னர். பின்னர், சாராய வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்த னர். இதனால் அதிர்ச் சியடைந்த மணமகன் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று சேகரை விடுவிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரை விடுவிக்க போலீ சார் மறுத்துவிட்டனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், அந்த கிராமத்தில் ஊரான் கைது செய்யப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்ட நிகழ்வு இதுவே முதல்முறையென மலைவாழ் மக்கள் கூறு கின்றனர். மணமகனுக்கு சித்தப்பாவும் அந்த கிரா மத்திற்கு ஊரானாகவும் இருந்து தாலி எடுத்து கொடுக்க வேண்டியவர் கைது செய்யப்பட்டதால் திருமணம் நிறுத்தப்பட் டது அந்த கிராம மக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூடுதல் தகவல்.
கைதால் பறிபோன நாட்டாமை பதவி
அத்தியூர் மலை கிராமங்களை பொறுத்தவரையில் ஊரானாக நியமிக்கப்படுபவர் தாலி எடுத்து கொடுத்த பிறகே திருமண நிகழ்வு நடந்து வருகிறது. தற்போது, வெள்ளக்கல்மலையின் ஊரான் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால், அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளார். மேலும், வேறு ஒருவர் புதிதாக ஊரானாக நியமிக்கப்படும் வரை அந்த கிராமத்தில் திரும ணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்காது.
நாட்டாமை சேகர்.
தற்போது நிறுத் தப்பட்ட இவர்களது திருமணமும் புதிய நாட்டாமை வரும் வரை நடத்தமாட்டார்கள். ஊரானாக மீண்டும் இவரோ அல்லது வேறு ஒருவரோ வருவது என்றால் 18 நாட்டாமைகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்ட பிறகு தான் ஊரானாக செயல்பட முடியும் என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.