மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் திறக்க வேண்டும்: அண்ணாமலை..!

2 Min Read
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

இது தொடர்பாக மாநிலம் முழுவதும், 22 அரசு மற்றும் 50 அரசுக்கு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகள் மட்டும் செயல்படுகின்றன. என்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் தனியாரால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் கூட இல்லை என்பதை சிஏஜி தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு

மேலும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில், காலியாக இருக்கும் 38% அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதையும், தமிழக அரசு முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை என்பதை இல்லாததையும், சிஏஜி தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் படைத்த குழந்தைகளுக்கான தொடர்பான கொள்கைகள் உருவாக்குவது குறித்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மாநில ஆலோசனைக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருப்பதாக, சிஏஜி தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், போலி சமூக நீதி நாடகமாடி மக்களை ஏமாற்றிக் கொண்டிருகிறது திமுக. உடனடியாக, காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்காக, குறைந்தது ஒரு சிறப்புப் பள்ளி வீதம் திறக்க திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review