காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற 29 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு, ஐந்து துறையில் இருந்து இளநிலை பிரிவில் 150 நபர்களும், முதுகலை பிரிவில் 145 மாணவ மாணவியர்களும் என மொத்தம் 296 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதன் பின் விழா மேடையில் கல்லூரி மாணவ மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றி பேசுகையில்,

சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி. அது அனைத்து உயிர்களுக்கும் சமமாக விளங்குகிறது. அது ஒரு குடும்பம், தன்னைப் போலவே சமமாக நினைப்பது எனவும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாழினேன் என்று வள்ளலார் சொல்வதும் சனாதனம் தான் எனவும், பாரதம் என்பது விஸ்வ குருவாக உள்ளது. உலகிற்கு நண்பனாக என்பதை விளக்கும் ஜி 20 மாநாடு மூலம் நிரூபிக்கிறது எனவும், மேலும் வானையும் கடலையும் அழைக்கும் அளவிற்கு தொழில்நுட்பத் துறையில் இந்தியா சிறந்த விளங்குவது பற்றியும், பொருளாதார முன்னேற்ற தொழில் துறை வளர்ச்சி நம் பாரத நாடு மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்வது பற்றியும் அவர் பேசினார்.
மேலும் தற்போது பட்டங்கள் பெற்றிருக்கும் பட்டதாரிகளின் பெண்கள் அதிகம் பட்டம் பெற்றிருக்கிறது. பெருமிதமாக இருப்பதாகவும் மாணவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க பெரிய அளவில் கனவு காண வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் எனவும், எண்ணிய எண்ணியக்கும் எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின், என்ற திருக்குறள் வாசகத்தை குறிப்பிட்டு அதேபோல் மன உறுதி வேண்டும் எனவும், நாட்டை கட்டமைப்பதில் ஆள்பவர்கள் மட்டுமல்லாமல் நம் அனைவரும் பங்கு உண்டு அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என பேசிய ஆளுநர், நாட்டில் உள்ள கடை கோடி குடிமகன்களுக்கும் எல்லா சேவைகளும் கிடைக்கும் படியாக டிஜிட்டல் இந்தியாவாக நம் நாடு திகழ்வது பற்றி பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் சங்கர மடத்தின் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதை அடுத்து கல்லூரியில் புதிய ஆய்வக கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். இவ்விழாவில் கல்லூரி தலைவர் வி.பி குமாரகிருஷ்ணன், செயலாளர் வி.பி ரிஷிகேசன், சென்னை வைஷ்ணவா கல்லூரி முன்னாள் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.