இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களே காரணம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

2 Min Read

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகித்த 13 பேர் தான் காரணம் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு கூறியது.

- Advertisement -
Ad imageAd image

அண்டை நாடான இலங்கை சுதந்திரத்திற்கு பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அந்நிய செலவாணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில் போனதால் விண்ணை தாண்டி சென்றது. உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் பொறுமை எழுந்து கொந்தளித்த போது மக்கள் தெருவில் இறங்கி போராடினர்.

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் காரணம்

பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழே இறங்கிய கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் அவர் நாடு திரும்பி விட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியோடு கொஞ்சம் சீராக மூச்சு விட தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப்பெரிய கடன் மழையில் இலங்கை உட்கார்ந்து இருக்கிறது. அதில் சுமார் பாதியளவு சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடனாகும்.

இந்த நிலையில் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் டிரான்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் 4 செயல்பாட்டாளர்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள் இலங்கையில் 2019 – 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினார்.

ராஜபக்சே சகோதரர்கள்

மேலும் இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால் லஷ்மண் கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா அட்டிகலே உள்ளிட்ட உயர் பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளனர். இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்கு செலவுக்கு தலா ரூபாய் 1 1/2 லட்சம் வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரலாம் என்று கூறப்படுகிறது.

Share This Article
Leave a review