பொதுமக்கள் அச்சம் : நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரியும் கொள்ளையர்கள்…!

2 Min Read

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து சுற்றி திரியும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள, காடாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட என்.எஸ்.கே அவென்யூ, நேரு நகர், கிருஷ்ணா கார்டன், பிரின்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் முகமூடி மற்றும் கையுறை அணிந்து, கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 மர்ம நபர்கள் அப்பகுதியை நோட்டமிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
மர்ம நபர்கள் சுற்றி திரியும் காட்சி

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து முகத்தை மறைத்தபடி அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு சுற்றித் திரியும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து உள்ளனர்.அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து முகத்தை மறைத்தபடி அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமீட்டு சுற்றித் திரியும் சிசிடிவி காட்சியை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது கோவை சுற்றுவட்டார கிராமகளில் பரவி மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர்கள் வீட்டை கண்காணிக்கும் காட்சி

உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோவை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர் காவல் துறையினர். இந்த நிலையில் காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். தற்பொழுது முகமூடி கொள்ளையர்களால் எவ்வித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பே முகமூடி கொள்ளையர்களை பிடிக்க வேண்டுமென அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலையதின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் மறைந்தபடி அப்பகுதி வீடுகளை நோட்டமிட்டு வந்த கொள்ளையர்கள், வீடுகளின் கதவுகளை உடைத்து பணம் மற்றும், நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review