பிரபல தமிழ் நடிகர் ரகு பாலையா (எ) ஜூனியர் பாலையா காலமானார். அவருக்கு வயது 70. திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரகு பாலையா , பிரபலமாக ஜூனியர் பாலையா (28 ஜூன் 1953 – 2 நவம்பர் 2023) தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். ஜூனியர் பாலையா முதன்மையான நடிகர்.இவரது திரை வாழ்க்கை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அவரது திரை வாழ்க்கை முழுவதும் துணை வேடங்களில் நடித்தார்.
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா. ரகு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். அவர் நடிகர் டிஎஸ் பாலையாவின் மூன்றாவது மகனாவார் .1975ஆம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

நடிகராக ஜூனியர் பாலையாவின் முதல் படத்தின் மூன்று நாட்களில் டி.எஸ்.பாலையா மரணமடைந்தார். எம்.ஆர்.ராதா இயக்கிய சுட்டான் சுட்டேன் என்ற திரைப்படத்தில் டி.எஸ்.பாலையா நடிக்கவிருந்தார் , அதில் ராதாவின் மகனாக ஜூனியர் பாலையாவும், பாலையாவின் மகனாக எம்.ஆர்.ஆர்.வாசுவும் நடிக்கவிருந்தனர், ஆனால் அவரது மரணம் தயாரிப்பை நிறுத்தியது. ஜூனியர் பாலையா பின்னர் பல படங்களில் நடித்தார், ஆனால் அவரது தந்தையின் வெற்றியை மீண்டும் உருவாக்க முடியவில்லை. அவர் பின்னர் திவாலானார், பின்னர் கிறித்துவ மதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினார் , ஹீலிங் ஸ்ட்ரைப்ஸ் மினிஸ்ட்ரி என்ற ஒரு குணப்படுத்தும் மையத்தை நிறுவினார்.
அஜித் நடித்து வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், இறுதியாக 2021ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சினிமா தவிர்த்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று (நவ.02) அதிகாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.