பெண்களுக்கு எதிரான பாலியல் அல்லாத குற்றங்களில் குற்ற பேரத்தை கோரலாம் – சென்னை உயர் நீதிமன்றம் .!

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்

பெண்களுக்கு எதிரான பாலியல் அல்லாத குற்றங்களில், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்க கேட்கும் குற்ற பேரத்தை கோரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

ஏற்கனவே இருந்த குற்றவியல் நடைமுறை சட்டப்படி, குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்க கோரும் குற்ற பேரம் பிரிவு இருந்தது.

அந்த பிரிவில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் குற்ற பேரம் நடத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றம்
பெண்களுக்கு எதிரான குற்றம்

இந்நிலையில், மனைவிக்கு சம்மன் அளிக்க வந்த நீதிமன்ற பெண் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வெங்கடேசன் என்பவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தண்டனை குறைக்க கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்ற பேர மனுவை தாக்கல் செய்தார்.

இதையும் கொஞ்சம் படிங்க :https://thenewscollect.com/housing-allotment-case-against-i-periyasamy-adjourned-to-august-27/

ஆனால், நீதிமன்ற பெண் ஊழியருக்கு இடையூறு செய்த குற்றம்,
பெண்களுக்கு எதிரான குற்றம் என்பதால், குற்ற பேரம் கோர முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அல்லாத மற்ற குற்றங்களில் குற்ற பேரம் கோரலாம் என்று உத்தரவிட்டுள்ளார். கீழமை நீதிமன்றங்கள் குற்றச்சாட்டு பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் குற்ற பேரம் தொடர்பான உரிமையை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

Share This Article
Leave a review