- பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி திரைப்பட இயக்குனர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.
மனுதாரர் வாய் சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது – நீதிபதி கருத்து,மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். – நீதிபதி உத்தரவு. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும்- உத்தரவிட்ட நீதிபதி. மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான மோகன் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது பழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான் ஒரு முருக பக்தர் எனவும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளை நான் பரப்பவில்லை , செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்டதை பேசியதாகவும் , தன் மீது வேண்டுமென்றே பொய்யான புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , பழனி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என இயக்குனர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,அப்போது அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்,மனுதாரர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனராக உள்ளதாகவும் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றே பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை உண்மைத்தன்மை உறுதி செய்யாமல் சமூக வலைதளம் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார் .
இவர் மீது சமயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் பிணையில் வெளியே வந்துள்ளதாகவும் தொடர்ந்து இது போன்று அவதூறு கருத்துக்களை பதிவிடும் இவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி , மனுதாரர் வாய் சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது. உண்மையிலேயே பழனி கோவில் மீது அக்கறை இருந்தால் பழனி கோவிலுக்கு சென்று அங்கு தூய்மை பணி மேற்கொள்ளலாம் அல்லது பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் சென்று கூட 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம் என கருத்து தெரிவித்தார்.
மேலும் மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு மன்னிப்பு கூற வேண்டும். பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒவ்வொன்றில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி. மனுதாரருக்கு மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவு.