தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைதாகும் சம்பவங்கள் மீனவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை கடற்படையின் அடாவடி செயல்பாட்டை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை. மீனவர்கள் கைதாகும் சம்பவம் தொடர் கதையாக நீடித்து வருகிறது.
தமிழக அரசியல் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்கு இதற்கு நிரந்தர தீர்வை காணுமாறு வலியுறுத்தி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இதேபோல் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படையாலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அத்துமீறி மீன்பிடிப்பு; இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது – 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.5 படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகளும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வந்தனர். இந்த சூழலை பயன்படுத்து அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படை நாள்தோறும் ரோந்து சென்று வந்துள்ளனர்.இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நாளை அவர்களது 5 படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர்.