திருச்சியில் கூடிய செயற்குழு , ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாரா ஓபிஎஸ் ?

2 Min Read
ஓபிஎஸ் இபிஎஸ்

சர்வாதிகார கும்பலை கூண்டோடு அழிக்கும் விதமாக திருச்சி மாநாடு அமையும் என்று அதிமுக வின் ஒருங்கிணைப்பாளளார் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . தினகரன் , சசிகலாவிற்கு முறைக்க அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

திருச்சியில் வருகிற 24-ந் தேதி முப்பெரும் விழா மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் , குறிப்பாக அதிமுக கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கொள்கைபரப்பு செயலாளர்கள் புகழேந்தி, மருதுஅழகுராஜ், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆலசோனை கூட்டம் முடிந்தவுடன் செய்தயாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது ” மனசாட்சிபடியும் , சட்டப்படியும்  எங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபிப்போம்.

ஓபிஎஸ்

வருகிற 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது. அதிமுக சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமையும்.

கட்சியின் ஆணிவேரான எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களுக்கு அளித்த உரிமையை நாங்கள் மீட்டெடுக்கப்படும். இந்த முயற்சியால் நாங்கள் மட்டும் அல்ல , அதிமுகவின் 1½ கோடி தொண்டர்களும் வெற்றி பெறுவார்கள். எம்.ஜி.ஆர்.காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை நடத்துவோம். அனைவரையும் ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் பயணிப்போம்.

1½ கோடி தொண்டர்களின் குரலாக நாங்கள் ஒலிக்கிறோம். தொண்டர்கள் நினைத்தால் எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இந்த மாநாட்டில் கருத்து தெரிவிப்போம்.

மாநாட்டிற்கு சசிகலாவை அழைப்பீர்களா? என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு, சசிகலா , தினகரன் மற்றும் அதிமுக வில் இருந்து சர்வாதிகார கும்பலால் நீக்கப்பட்ட அனைவர்க்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை , அரசியல் வல்லுநர்கள் , அதிமுக தொண்டர்கள் , பொதுமக்கள் என அணைத்து தரப்பினரும் கூர்ந்து நோக்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share This Article
Leave a review