முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.! ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநர் பேச்சால் சர்ச்சை..

3 Min Read
ஆளுநர் ரவி

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் என்பது தொடர் கதையாகி வருகிறது.‌‌அதில் ஸ்டாலின், ஆர்.என்.ரவி மோதல் ஒன்றும் புதிதல்ல.‌‌ஜெயலலிதா, சென்னா ரெட்டி காலத்தில் இருந்தே சர்ச்சைகளை தமிழகம் கண்டுள்ளது.‌‌தற்போதைய திமுக அரசில் எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் அதை முடக்கி போடுவதில் தான் ஆளுநர் மும்முரம் காட்டுவதாக ஆளும் கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.‌‌கவர்னர் வேலையை விட்டுவிட்டு அரசியல்வாதி போல செயல்படுகிறார் எனவும் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

              ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் பெரும் சிக்கலை உண்டாக்கி வரும் ஒரு விஷயம் என்றால் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை சொல்லலாம்.‌‌ஏனெனில் ஆன்லைனில் ஆசை காட்டி பணத்தை பந்தயம் வைத்து லட்சக்கணக்கில் இழக்க வைத்து விரக்தியில் ஆழ்த்தும் அந்த கேம் கொடூர முகம் கொண்டதாக காணப்படுகிறது.‌‌இதனால் பலரும் செய்வதறியாது தற்கொலை செய்து கொள்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

இதுவரை 45க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை ஆன்லைன் ரம்மியால் பறி கொடுத்துள்ளனர். எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.‌‌ஆனால் எந்த ஒரு சிக்கலுக்கும் தற்கொலை தீர்வல்ல. அப்படி ஒரு எண்ணம் தோன்றினால் தமிழக அரசின் உதவி மைய எண் 104ஐ அழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

‌‌தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியது.‌‌இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.‌‌ஆனால் பல்வேறு விளக்கங்கள் கேட்டு விஷயம் இழுபறியானது.‌‌ஆளுநர், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சந்திப்பு என அனல் பறந்தது.‌‌அவசர சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆன நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார்.

‌                                                                இந்நிலையில் மீண்டும் தீவிரமாக ஆலோசித்து மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.‌‌இதுவரை இரண்டு வாரங்கள் ஆன நிலையில் எந்தவித நடவடிக்கையும் ஆளுநர் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.‌‌இதற்கிடையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமை பணி தேர்வர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி   உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,‌‌”ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்” என்று கூறி பரபரப்பை கொளுத்தி போட்டு விட்டார்.‌‌உடனே பலருக்கும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தான் முதலில் நினைவில் தோன்றியது.

மோடி கவர்னர் ரவி

இரண்டாவது முறையும் கிடப்பில் போடப்பட்டு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டு விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.‌‌இந்த விஷயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே செயல்படுவதாக தமிழக அரசு கூறினாலும்,‌‌அதை ஆளுநர் மாளிகை ஏற்றுக் கொள்வது மில்லியன் டாலர் கேள்வி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

‌‌பல உயிரைக் குடிக்கும் இந்த ரம்மி விளையாட்டு தமிழகத்திற்கு தேவை தானா. இதனால் ஏதெனும் மக்களுக்கு ப்ரையோஜனம் இருக்கிறதா?‌‌இல்லை ஆளுநர் கமிஷனை வாங்கிக் கொண்டு பாஜக விற்க்கு ஏஜெண்ட் வேலை செய்கிறாரா என்கிற அச்சம் மக்களிடத்தில் நிலவுகிறது.

‌இதற்க்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கனடணம் தெரிவித்திருக்கிறார்..

‌                                                             சட்டமன்ற செயல்பாடுகள், நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் செயல்களில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார்.‌‌ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.‌‌தான் கூறிய கருத்தை திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துகொண்ட பதவிப் பிரமாணத்திற்கு உண்மையாக நடந்துகொள்வதாகும். சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பான‌‌உண்மைக்கு புறம்பான கருத்துக்களை ஆளுநர் தெரிவித்துள்ளார். மாநில நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநருக்கு கண்டனங்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review