இங்கிருந்து யாரும் பீகார்க்கு வேலை தேடிச் செல்வதில்லை-பீகாரில் இருந்து வந்த ஆளுநர் , அமைச்சர் எ.வ.வேலு

1 Min Read
அமைச்சர் எ.வ.வேலு

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசிற்கும் பாலமாக திகழ வேண்டும்.
மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை  ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் .இதை விட்டு விட்டு
மாநிலத்தில் இரட்டை ஆட்சி முறையே கொண்டு வரும் நோக்கில் செயல்படுவதை ஏற்க முடியாது என நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ வ வேலு நேற்று இரவு கும்பகோணத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு தின பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

கலைஞர் நூற்றாண்டு தின பொதுக்கூட்டம் நேற்றுஇரவு கும்பகோணத்தில் நடைபெற்றது .
இதில் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு கலந்து கொண்டார் .

அப்போது பேசிய அமைச்சர் எ.வ வேலு,

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக திகழ வேண்டும் .
மாநில அரசு செய்யும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும்.
இதை விட்டுவிட்டு இங்கு ஆளுநராக செயல்படுவர் 100 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில்  நடைபெற்றதை போல் மீண்டும் இரட்டை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பதாக குற்றம் சாட்டினார்.

திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவினருக்கு அமைச்சர் பதவி முக்கியமா? சமூக நீதி முக்கியமா ?என்றால் சமூக நீதியே முக்கியம் என்று கூறுவார்கள் என எவ வேலு தெரிவித்தார்.

இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி  அடைந்து வரும் மாநிலங்களில் முதன்மையானதாக விளங்குவது தமிழ்நாடு என்றும் ,
இங்கிருந்து யாரும் பீகார்க்கு வேலை தேடிச் செல்வதில்லை என்றும் மாறாக பீகாரிலிருந்து தான் இங்கு பலர் வேலைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பாக ஆளுநர் கூட பீகாரில் இருந்து இங்கு வந்துள்ளார் என்றும்
எ.வ.வேலு தெரிவித்தார்.

Share This Article
Leave a review