மனக்குமுறல் தாளாமல் பெற்றோரிடம் கோச்சிங் சென்ட்ர் போவதாக கூறிவிட்டுவந்த மாணவி வடலூர் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
]பிளஸ் டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் இப்போது நீட் தேர்வுக்கு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் ரயில் தண்டவாளத்தில்
சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி என்பவர்.
இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் நிஷா சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 399 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருந்தார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அந்த மாணவியின் நீண்ட நாள் கணவாக இருந்திருக்கிறது
இதனால்,அதன் மேல் ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால் தேர்வில் பாஸ் ஆகவில்லை.
இதனையடுத்து மாணவியை இந்திரா நகரில் உள்ள நீட் தனியார் கோச்சிங் சென்டரில் பெற்றோர்கள் பயிற்ச்சிக்காக சேர்த்திருக்கின்றனர்.
சில மாதங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார் மாணவி
சமீபத்தில் கோச்சிங் சென்டரில் நடைபெற்ற மாதிரி தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.
இதனையடுத்து சில நாட்களாக இந்த தோல்வி குறித்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளார்.
மனக்குமுறல் தாளாமல் பெற்றோரிடம் நேற்று கோச்சிங் சென்டர் போவதாக கூறிவிட்டு வந்த மாணவி
வடலூர் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடலூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

மாணவி நீட் தேர்வு அச்சத்தால்தான் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தற்கொலை குறித்து அரசியல் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக உறுதியான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 27ம் தேதி சேலம் மாவட்டத்தில் நீட் அச்சம் காரணமாக மாணவர் ஒருவர் பயிற்சி மையத்திலேயே தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார்.
கடந்த 10 நாட்களில் இது இரண்டாவது தற்கொலையாகும்.
அதேபோல நடப்பாண்டில் நடைபெறும் இரண்டாவது தற்கொலை இது.
கடந்த 2017ம் ஆண்டில் நீட் நடைமுறைக்கு வந்த பின்னர்,
அதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டு விட்ட நிலையில்,
2021 செப்டம்பரில் மீண்டும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
அதை ஆளுநரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 14 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால்,
நீட் விலக்கு சட்டத்திற்கு இன்று வரையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில்தான் மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழு கூறுகையில்,
”மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணிக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,
பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது” என்று கூறுகிறது.

அதேபோல ”நீட் தேர்வுக்கு முன்பாக 2016-17ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 65.17 சதவிகிதமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை,
நீட் தேர்வுக்கு பிறகு 49.91 சதவிகிதமாக குறைந்துள்ளது.
அதேநேரம் 31.83 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற மாணவர்களின் எண்ணிக்கை,
50.09 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவ படிப்பு சேர்க்கையும் நீட் தேர்வுக்கு முன் 19.26 சதவீதமாக இருந்து,
ஆனால் நீட் தேர்வுக்கு பின் 10.46 சதவீதம் ஆக குறைந்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வின் அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவ மாணவிகளின் பலி எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கூடிக் கொண்டே போகிறது.
எத்தனை கோச்சிங் சென்ட்டர்கள் வந்தும் இதற்கு விலக்கு கிடைக்கவில்லை.
மத்திய அரசிடம் இருந்தும் எந்த விதமான பதிலும் வரவில்லை,
மாநில அரசிடம் இருந்தும் இதை தடுப்பதற்க்கான எந்த ஒரு ரகசிய
திட்டமும் கையில் இல்லை, இந்த அவலம் எப்பொழுது மறையும் என்று அம் மாணவியின் உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் கடந்த 10 நாட்களில் 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேதனையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதார்.
மக்களோ இதற்க்கு இந்த அரசு என்ன பதில் தரப் போகிறது என்று கேட்கிறார்கள்.கல்வியின் மீது அக்கறை உள்ளவர்களும் இப்படிதான்கேள்வி எழுப்புகிறார்கள். மாநில அரசோ மத்திய அரசின் மீது பழிபோடுவதிலே குறியாக இருக்கிறது.என்னதான் விடை…..இதற்க்கு.
Leave a Reply
You must be logged in to post a comment.