என்.எல்.சி. ஒப்பந்த பிரச்சனைக்கு தீர்வு காண மட்டக்குழுவை அமைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • நீண்டகாலமாக உள்ள என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண, உயர் மட்டக்குழுவை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோத போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நல நீதிமன்றங்கள் இருக்கும் போது, வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக்கோரி நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆறு மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த குழுவில், மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் நிலக்கரி அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/in-the-case-of-actor-dhanush-and-aishwaryas-case-the-case-was-adjourned-as-both-did-not-appear/

மேலும், என்.எல்.சி. துணை பொது மேலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம் பெற வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதி, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண உத்தரவிட்டு,
என்.எல்.சி. நிர்வாகம் தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து வைத்தார்.

Share This Article
Leave a review