விழுப்புரம் அருகே வளவனூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.ராசன், உமாதேவி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்.உயிரிழப்பிற்கு என்ன காரணம் கொலையா,தற்கொலையா என போலீசார் விசாரணை.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரில் விசாரணை, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை. டிஐஜி ஜியாவுல் ஹக் நேரில் விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் வசித்து வந்தவர்கள் ராசன், உமாதேவி தம்பதியினர் இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.ராசன், உமாதேவி தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் புதுச்சேரியில் வசித்து வரும் இந்த சூழ்நிலையில் இருவரும் வளவனூரில் உள்ள வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை பால் வாங்குவது கூட வழக்கமாக வருகின்றவர்கள் வரவில்லை. அத்துடன் வீட்டின் தெருவிளக்குகள் போடாமல் இருளில் வீடு இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டினர் விளக்கை போடுவதற்கு வீட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது விளக்கை போட்டவுடன் இருவரும் மயங்கி நிலையில் அறைக்குள்ளே இருந்தது கண்டு அக்கப் பக்கத்தினரை அழைத்துள்ளனர். வந்து பார்த்தபோது இருவரும் இறந்து போனது தெரிந்தது .உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் வளவனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தம்பதியினர் இருவரும் ஒரே நேரத்தில் உடல் நலக் கோளாறு காரணமாக இறக்க வாய்ப்பு இல்லை. யாரோ இவர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங் சாய் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து டிஐஜி ஜியாவுல் அவுக் நேரில் வந்து விசாரணை.
வளவனூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் வயதான தம்பதியினர் இப்படி கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்குமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடிக்கி உள்ளனர்.விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸ் அறிவிப்பு.